ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை உள்ள சுருக்கம்,முக்கிய பகுதி, முக்கிய வசனம் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பரிசுத்த வேதாகமம் (word of God) பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டது. பாவம் செய்த மனிதனின் குற்ற உணர்வுகளை மாற்றி தேவனுடைய நீதியினால் நீதிமான் ஆக்கப்பட கர்த்தருடைய வார்த்தை உதவுகிறது. கர்த்தருடைய வார்த்தை ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. நம்மை பரிசுத்தமாக வாழ வைக்கவும் குமாரனின் சாயலாக நம்மை மாற்றவும், பரலோகில் நம்மை சேர்க்கும் வரைக்கும் வழுவாது காத்து, பாதைக்கு வெளிச்சமாக நமக்கு இருப்பது வேத புத்தகம். வேதத்தை நம் மூளை அறிவினால் விளங்கிக்கொள்ள முடியாது பரிசுத்த ஆவியானவர் மூலமே விளங்கிக்கொள்ள முடியும். இருதயத்தில் வேத வார்த்தைகளை பதித்து வார்த்தையின் படி நடக்கும்போது அவர் நம்மை வழுவாமல் காப்பார் அவரது வார்த்தை மூலம் கிடைக்கும் வாக்குத்தத்தம் வெறுமையாய் திரும்பாது. ஏசா 55:11.