காகிதம் (Paper) என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள்ஆகும். மரம்கந்தல்அல்லது புல் ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் செல்லுலோசுக் கூழின் ஈரமான இழைகளை அழுத்தி பின்னர் நெகிழும் தன்மை கொண்ட தாள்களுக்கிடையில் உலர்த்தி இக்காகிதத்தைத் தயாரிக்கிறார்கள். எழுதுதல், அச்சிடுதல், பொட்டலம் கட்டல், தொழில்துறை மற்றும் கட்டுமான செயல்முறைகள் உட்பட பல பயன்களைக் கொண்ட ஒரு பல்துறை பொருளாக காகிதம் பயன்படுகிறது. தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL) தமிழகஅரசால்[3] செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்கள் கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனமானது சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டது. இது கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.11.0488°N 77.9977°E இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.